Wednesday, February 24, 2010

ஆசை!!!

யாருமில்ல சாலையில்...


உன் விரலோடு என் விரல் கோர்த்து நடக்க ஆசை ...,

மஞ்சள் நிற மாலை வேலையில்....

பூமர நிழலில் உன் தோலில் தலை சாய்க்க ஆசை...,

நீ பேசும் வேலையில்....

உன் எதிர் அமர்ந்து இமை மூடாமல் உன் விழி காண ஆசை...,

கலையாத உன் கேசத்தை கலைத்து விட்டு...

என் விரலால் உன் தலை கோத ஆசை...,

உன் இதழ் பதித்த கனியில் நீ அறியா வண்ணம் என் இதழ் பதிக்க ஆசை...

சின்ன சின்ன சண்டை போட்டு உன்னை நான் சீண்டி பார்க்க ஆசை...

கோபம் கொண்ட வேலையில் உன்னிடம் கொஞ்சி பேச ஆசை...,

முடி கொண்ட உன் மார்பில் என் முகம் பதிக்க ஆசை...

மோகம் வந்தால் உன் அங்கம் படர விட ஆசை...

சோகம் வந்தால் உன் மடியில் விழுந்து விட ஆசை...

இன்பமோ துன்பமோ உன்னோடு மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசை...

எத்தனை பிறவிகள் வரினும்...

உன் உயிரில் என் உயிரும் கலந்து விட ஆசை...

No comments:

Post a Comment