Friday, December 3, 2010

எப்படி சொல்வது என் காதலை....



மேனியெனும் வீணையில்- உன்
விரல் மீட்டும் நாதத்தில்,
விழி மயங்கும் நேரத்தில்,
இதழால் இமை திறக்கிறாய்...
நாணத்தில் நான் தவிக்கும் வேளையில்,
காதோரம் காதல் உரைக்கிறாய்...
உன்னிடம் எப்படி சொல்வது
என் காதலை....

உன் வாசம்..என் சுவாசம்...





நீ விடைபெற்று
சென்ற பின்னும்
என்னுடனே தொடர்கிறது..,
உன் மூச்சுக்காற்றின் வாசமும்.....
நீ விட்டு சென்ற
உன் நினைவுகளும்...