Monday, May 10, 2010

நியாயமா இந்த பிரிவு ?

என் தோழி ஒருவர், 4 வருட இல்லற வாழ்வின் போரட்டத்தின் முடிவாய் தன் துணையை பிரிந்து வருந்தியபோது தோன்றியது...


பூவென்ற மனம்,

புயலெனும் வாழ்வில் ,

தள்ளாடி.. தடுமாறி...

நிலைகொள்ளும் நேரம்...,

வேரில் வெந்நீரை

பாய்ச்சுவது நியாயமா....?


திருமண போர்வையில்,

காதல் கண்ணாமூச்சியில்,

கண்டெடுத்த பிள்ளை செல்வத்தை,

ஒரே நொடியில் தொலைக்க

நினைப்பது நியாயமா....?


பார்வையில் குறை..,

பாலில் விஷம் என்று

ஒதுக்குவது நியாயமா...?


காகித கப்பலுக்கு,

நங்கூரம் போடாதது

குறையென வாதாடுவது..

நியாயமா...?


கலையாத கனவும்..

பிரியாத உறவும்...

நியாயமில்லை அல்லவா !?