Friday, December 3, 2010

எப்படி சொல்வது என் காதலை....



மேனியெனும் வீணையில்- உன்
விரல் மீட்டும் நாதத்தில்,
விழி மயங்கும் நேரத்தில்,
இதழால் இமை திறக்கிறாய்...
நாணத்தில் நான் தவிக்கும் வேளையில்,
காதோரம் காதல் உரைக்கிறாய்...
உன்னிடம் எப்படி சொல்வது
என் காதலை....

உன் வாசம்..என் சுவாசம்...





நீ விடைபெற்று
சென்ற பின்னும்
என்னுடனே தொடர்கிறது..,
உன் மூச்சுக்காற்றின் வாசமும்.....
நீ விட்டு சென்ற
உன் நினைவுகளும்...

Tuesday, November 16, 2010

இதை விட ஒரு அவமானம் இந்தியாவிற்கு வேண்டாம்...

செய்தி :
காமன்வெல்த் போட்டிக்கு இன்னொரு பின்னடைவு. ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், 27 கட்டுமான தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் காமன்வெல்த் போட்டி வரும் அக்டோபரில்(3-14) நடக்கிறது. இதற்கான மைதானங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்து உள்ளது. தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதால், போட்டிக்கான கட்டடங்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. உதாரணமாக மிக முக்கியமான ஜவஹர்லால் நேரு மைதானத்தின் மேற்கூரைப்பகுதி நேற்று முன் தினம் இடிந்ததில், துணை கமிஷனர் உள்ளிட்ட இரண்டு போலீசார் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இம்மைதானத்தின் வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் மாலை 3.10 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் 27 பேர் காயமடைந்தனர்.

விசாரணைக்கு உத்தரவு: சுமார் 95 மீட்டர் நீளம் கொண்ட இந்த தொங்கு நடை @மம் பாலம், மைதானத்தின் "பார்க்கிங்' பகுதி மற்றும் தெற்கு டில்லியின் சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்தது. இதனை ரூ. 10.5 கோடி செலவில் சண்டிகரை சேர்ந்த பி.என்.ஆர்., இன்பிரா என்ற நிறுவனம் கட்டி வருகிறது. டில்லி அரசின் பொதுப்பணித் துறை தான், ஒப்பந்தத்தை பி.என்.ஆர்., நிறுவனத்துக்கு அளித்தது. தற்போதைய விபத்தை தொடர்ந்து, பொதுப்பணித்துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விபத்து எப்படி?:  மேம்பால விபத்து குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒருபகுதியில் "கான்கிரிட்' கலவை பூசும் போது, பாலம் இடிந்து விழுந்ததாக, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். டில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ் குமார் கூறுகையில்,""தொழிலாளர்கள் ஒரே இடத்தில் "கான்கிரிட்டை' கொட்டியதால் விபத்து ஏற்பட்டது. போட்டி துவங்குவதற்கு முன் பாலத்தை சரி செய்து விடுவாம்,''என்றார். (அப்போ  ஒரு கான்கிரிட் கலவையை  தாங்குற சக்தி கூட நீங்க கட்டின பாலத்திற்கு இல்லைன்னு ஒத்துக்குறீங்க... )

மழை காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,""கடந்த 20 நாட்களாக டில்லியில் பெய்த மழை காரணமாக பாலம் இடிந்திருக்கலாம்,''என்றார்.
இக்கருத்தை பொதுப்பணி துறை இன்ஜினியர் ராகேஷ் மிஸ்ரா மறுத்தார். இவர் கூறுகையில்,""மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு மழை காரணமல்ல. ஏதோ தவறு நடந்திருக்கிறது. இது பற்றி அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இதனால், காமன்வெல்த் போட்டிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது உண்மை தான் ,''என்றார். ( என்னத்த சொல்ல ....)

அசுத்தமான விளையாட்டு கிராமம் : காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் 8 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் மிகவும் அசுத்தமாக உள்ளது. இங்கு பணிகள் நிறைவடையவில்லை. ரூம்களின் கதவுகள் திறந்து கிடக்கின்றன. மெத்தையில் தெரு நாய் உறங்குகிறதாம். கழிப்பறைகள் துர்நாற்றம் அடிக்கிறதாம். இதனால் நியூசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இங்கு வாழ்வதற்கு தகுதியற்ற நிலை காணப்படுவதால், தங்குவதற்கு ஓட்டல் ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தியுள்ளன. இது குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல், கேபினட் செயலர் சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்துக்குள் சரி செய்யும்படி கெடு விதித்துள்ளார்.
இது குறித்து ஒருங்கிணைப்பு கமிட்டியின் செய்தி தொடர்பாளர் லலித் பனோட் கூறுகையில்,""அவமானப்பட வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. சுத்தப் படுத்தும் பணியை துவக்கி விட்டோம். இன்னும் 36 மணி நேரத்தில் பணிகள் முடிந்து விடும்,''என்றார்.


விலகினார்  சாமுவேல்ஸ் :பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்னை காரணமாக டில்லி காமன்வெல்த் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வட்டு எறிதல் வீராங்கனை டேனி சாமுவேல்ஸ் விலகியுள்ளார். ஏற்கனவே ஜமைக்காவின் தடகள வீரர்களான உசைன் போல்ட், அசபா பாவல் போன்றோர் விலகியுள்ளனர்.

வெடிமருந்துடன் ஆஸி., நிருபர் : காமன்வெல்த் போட்டிக் கான பாதுகாப்பு ஏற்பாடு மட்டமாக இருப்பதை ஆஸ்திரேலிய "சேனல் 7' குழுவினர் அம்பலப்படுத்தி உள்ளனர். இதன் நிருபர் மைக் டபி, வெடிமருந்து பையுடன் நேரு மைதானத் துக்குள் சென்றுள்ளார். இவரை போலீசார் யாரும் சோதனை செய்யவில்லை யாம்.

Saturday, September 4, 2010

அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை..!!

தமிழக அரசியல் தலைவர்கள், தங்கள் மேடைப் பேச்சுக்களில், "அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை' என கேட்குமளவுக்கு, அநாகரிக வார்த்தைகள் பேசுவதை, மக்கள் கொஞ்சம் கூட விரும்பவில்லை (அதை பற்றி யார் கவலைபட போகிறார்கள்...). அனுபவமிக்க தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூத்த வயதுடைய முதல்வரை, "தீயசக்தி' என, முன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரை, "வாய்தா ராணி' என ஆளுங்கட்சியினரும் பட்டங்களிட்டு வசைபாடுவதை நிறுத்திவிட்டு, ஆட்சியின் குறை நிறைகளை மட்டும் பேசினால் நல்லது.
வெறும் 2,653 வி.ஏ.ஓ., வேலைக்கு, 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது வேதனையளிக்கிறது. வேலை இல்லா திண்டாட்டங்களை ஒழிப்பதே எமது லட்சியமென்று மேடைகளில் தலைவர்கள் முழங்குவதை விட்டு விட்டு, ஒருவருக்கொருவர் பகைமைச் சொற்போர் நடத்தி வருவது, ஆரோக்கியமான அரசியல் தானா என சிந்தித்தால் நல்லது(ம்ம்ம்...அதுக்கு வழியே இல்ல..).

எதிர்வரும் தேர்தலில், எந்த மாதிரியான இலவசங்களைக் கொடுத்தால், அப்பாவி மக்களை மயக்கலாம் என சிந்திப்பதை விட்டு விட்டு, வேலை வாய்ப்பற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையை உருவாக்கித் தர யோசித்தால் நல்லது.
"வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை வழங்குறோம்' என எந்தக் கட்சியாவது உறுதி அளித்தால், அக்கட்சியினருக்கு தங்கள் ஓட்டுகளை அள்ளித் தர மக்கள் தயாராக உள்ளனர்.
வேலை வாய்ப்பின்மை ஒன்று தான், நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு காரணம் என்பதை, நமது தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எல்லா தலைவர்களுமே இன்று(1-க்கு 4 சொந்த வீடு, சொந்த கல்லூரி, சொந்த நிறுவனம் அப்டீன்னு) தன்னிறைவோடுதான் இருக்கின்றனர்; இனியாவது, மக்களைச் சென்றடைய வேண்டிய உருப்படியான திட்டங்களை, இவர்கள் கொண்டு வர வேண்டும்.

தமிழக முதல்வர் சில நாட்களுக்கு முன், "மதுவிலக்கு கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும்' என்ற சர வெடியை கொளுத்தி விட்டார். டாஸ்மாக் ஊழியர்கள், எங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுமோ என்ற அச்சத்தில்(அவனுக்கு அவன் பொழப்பு..), தொடர் போராட்டம் என்பதை மாற்றி, ஒரு நாள் போராட்டம் என அறிவித்து அமைதியாயினர்.
"பூரண மது விலக்கு' என குரல் எழுப்பிக் கொண்டிருந்த ராமதாஸ், முதல்வர் அறிக்கை, தனக்கு வெற்றி(?) என கனா கண்டார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தோழமை கட்சியான காங்கிரஸ் போன்றவை, மவுனமாகி விட்டன.

தமிழகத்தை சுற்றியுள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில், மதுக் கடைகள் வெகு ஜோராக நடக்கும்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த முடியாது.
டாஸ்மாக் வருமானம் தான், பல இலவச திட்டங்களுக்கு கை கொடுக்கிறது. மக்களுக்கு கிடைக்கும் இலவச திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுபவர்கள் தான், "பூரண மது விலக்கு' என்று அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர்(வேறென்ன...).

தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களின் குறைகள் வெளிவராமல் இருக்க, தாக சாந்தியாக இருக்க போவது, டாஸ்மாக் கடைகளிலிருந்து வரும் தேவாமிர்தம் தான்.
இனி எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பூரண மதுவிலக்கு ஒரு கானல் நீர் தான். மொத்தத்தில், சமுதாயச் சீரழிவு, மக்கள் உடல் நலம் எல்லாம், பின் தள்ளப்படுகின்றன.

Tuesday, August 24, 2010

என்ன அநியாயம் இது!!!ஜனங்களே...நல்லா கேளுங்க..

செய்தி:  எம்.பி.,க்களுக்கு மாத அலவன்ஸ் மேலும் உயர்வு : வரியும் கட்ட வேண்டாம் என மத்திய அரசு முடிவு

எம்.பி.,க்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
"இந்த சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும்'(நல்லா note பண்ணிக்கோங்க...)  என,பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது.
ஆனால்,அந்த அளவுக்கு உயர்த்தினால்,
மக்களிடையே பெரும் அதிருப்தி உருவாகும் என்பதால்(ஓஓ.....அதை பத்தி கூட கவலை படறாங்களா.. மக்களை விடுங்க..முட்டாள்கள்...இதை பத்தியெல்லாம் கவலை பட மாட்டங்க.. அடுத்த வாரம் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில யாரு செயிப்பாங்கனு யோசிச்சிட்டு இருப்பாங்க.),தற்போது வாங்குவதை மூன்று மடங்கு அதிகமாக உயர்த்தி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.இதற்கு மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.(அட பாவிங்களா...நாங்க வருசம் முழுசும் ராத்திரி பகலா வேலை செஞ்சாலும் 10% increment குடுக்க மாட்டேனு சொல்றானுக....கேட்டா பொருளாதார நெருக்கடி-னு சொல்றனுக...உங்களுக்கு 300% ???என்ன அநியாயம் இது?) 
 அத்துடன்,தொகுதி மற்றும் அலுவலக அலவன்ஸ்கள் மாதம் தலா 20 ஆயிரம் ரூபாய் என்பது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. (இது வேறயா...)

இருந்தாலும்,"இந்த சம்பள உயர்வு போதாது,(அடங்கொக்கா மக்கா...!!) பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்தபடி,
80 ஆயிரத்து ஒரு ரூபாயாக எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்' என வலியுறுத்தி, கடந்த வாரம் ராஷ்டிரிய ஜனதா தளம்,சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர்.
(இந்த மாதிரி மக்கள் பிரச்சனைக்கும் கொஞ்சம் போராடுங்களேன்..பார்க்கலாம்...)
இதையடுத்து, அந்த கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (இதுல ஆலோசனை வேறயா....எல்லாம் பேசி வச்சது தானே...)
பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. (அவர் பாவம்.. என்ன பண்ணியிருக்க போறாரு..சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு... சோனியாம்மா அனுமதி தந்ததும்...சொன்ன இடத்துல Sign பண்ணியிருப்பாரு...)
இந்தக் கூட்டத்தில்,எம்.பி.,க்களின் தொகுதி அலவன்ஸ்(அப்பூடின்னா...என்னாங்கோ....இந்த ஓட்டு போட்டவங்களுக்கு ஏதாவது பண்ணுங்கனு சொல்லி குடுக்கிறதா....)  மற்றும் அலுவலக அலவன்ஸ்களை மாதம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம்,
அதாவது இரண்டும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வகை செய்யும் முன்மொழிவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இதற்கு அமைச்சரவையும் உடனடியாக ஒப்புதல் அளித்தது.(இதுக்கு மட்டும் உடனே குடுத்திருவீங்களே... ) இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையுண்டு. (இது  வேறயா....)
இதனால்,எம்.பி.,க்கள் இனி மாதம் ஒன்றுக்கு தொகுதி அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும்,அலுவலக அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் அலவன்சாக பெறுவர்.
சம்பளம் 50 ஆயிரம் ரூபாயையும் சேர்த்தால், மாதம் ஒன்றுக்கு 1.40 லட்சம் ரூபாய் பெறுவர். (ஆக மொத்தம் எங்களுக்கு மொட்டை...)
இதுதவிர, வேறு பல சலுகைகளும் உண்டு. (அதுதான் தெரியுமே...நீங்க மட்டுமில்லாம...உங்க குடும்பம்..சொந்தகாரங்க எல்லோரும் எங்க காசுல ஊரு சுத்தலாம்...உங்க அடுத்த தலைமுறைக்கும் இப்பவே எங்ககிட்டயிருந்து சுருட்டி சொத்து சேர்த்து வைக்கலாம்...)

மக்களே,நல்லா கேளுங்க... ஒண்ணுமே பண்ணாம மாசம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சம்பளமாம். நமது வரி பணம் எப்படி வீணாகிறது பார்த்தீர்களா? இது தவிர பல சலுகைகள், அதாவது லஞ்சம், ஊழல் இப்படி. இந்தியா வேகமா முன்னேறிடும். ஐந்து வருடம் பாராளுமன்ற உறுப்பினரா இருந்த போதும், வாழ்க்கைல வேண்டும் அளவுக்கு சம்பாதிச்சிடலாம். எதுக்கு வேலைக்கு போய் கஷ்டபடணும் ...
ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இணைந்துவிட்டு ,பின்னர் எம்.பி./ எம்.எல் .ஏ ஆகிவிட்டால் பின்னர் வாழ்நாள் எல்லாம் கஷ்டமே இல்லை. பதவியில் இல்லையென்றாலும் சலுகைகளும் பென்ஷனும் இவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த உயர்வுக்கு இவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்கள்?
குப்பை கூட்டும் வேலைக்கே பட்டதாரிகளை கேட்கும் நிலையில் ரவுடிசமும் ,கொலை, கொள்ளை ,கள்ளசாராயம், விபசாரம்,கடத்தல், போன்ற சமுக விரோத செயல்களில் வளர்ந்த எம்.பி. கும்பல்களுக்கு இதுபோன்ற ஒரு ஊதிய உயர்வு தேவையா? பெரும்பாலோர் கோடி கோடியாக சொத்து உள்ள "கல்வியாளர்கள்" அல்லது ஊழலில் ஊறி உப்பிய பெருச்சாளிகள்.ஒரு பன்னாட்டு விளையாட்டு விழா ஏற்பாடுகளில் எத்தனை கோடி ஊழல் ! தோண்ட தோண்ட வந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் பெற்றால் தான் ஒரு எம்.பி. குடும்பம் நடத்த முடியும் என்றால் சாதாரண ஜனங்கள் என்ன செய்வது ? எங்கே போவது.?
பாரத தாயே.. என்னதான் நடக்கிறது இந்த பாரத தேசத்தில்....!

Tuesday, June 1, 2010

காதலை விட்டொழித்த பின்... (கவிதைச் சோலை!) From Varamalar





* இனி நமக்கு

தேவைப்படப் போவதில்லை

குத்திக் கிழிக்கும் கூர்

வார்த்தைகள்...



* காத்திருத்தலிலும்,

தேடுதலிலும்

வீணாய் கரையும்

நேரங்கள் இனி மிச்சம்...



* சமாளிப்புகளும்,

பொய்களும் இனி நமக்கு

அவசியப்படாது...



* ஓயாமல் உழைத்துக்

கொண்டிருந்த நம்

அலைபேசிக்கு இனி

முழுநேர ஓய்வு...



* எதிர் பால்

நண்பர்களுடன்

உன், என் சந்தேகக் கண்களை

தாண்டி இனி

நிம்மதியாக நாம் சிரித்துப் பேசலாம்...



* இனி காதலிப்பதில்லை

என முடிவெடுத்த பின்

நஷ்டங்களை விட

லாபங்களே அதிகமாக இருக்கின்றன...!

— ரா.பூபாலன், கோவில்பாளையம்.

Monday, May 10, 2010

நியாயமா இந்த பிரிவு ?

என் தோழி ஒருவர், 4 வருட இல்லற வாழ்வின் போரட்டத்தின் முடிவாய் தன் துணையை பிரிந்து வருந்தியபோது தோன்றியது...


பூவென்ற மனம்,

புயலெனும் வாழ்வில் ,

தள்ளாடி.. தடுமாறி...

நிலைகொள்ளும் நேரம்...,

வேரில் வெந்நீரை

பாய்ச்சுவது நியாயமா....?


திருமண போர்வையில்,

காதல் கண்ணாமூச்சியில்,

கண்டெடுத்த பிள்ளை செல்வத்தை,

ஒரே நொடியில் தொலைக்க

நினைப்பது நியாயமா....?


பார்வையில் குறை..,

பாலில் விஷம் என்று

ஒதுக்குவது நியாயமா...?


காகித கப்பலுக்கு,

நங்கூரம் போடாதது

குறையென வாதாடுவது..

நியாயமா...?


கலையாத கனவும்..

பிரியாத உறவும்...

நியாயமில்லை அல்லவா !?

Friday, April 23, 2010

அது ஒரு கனாக் காலம்!!!


பாட புத்தகத்தில் மயிலிறகு வளர்த்த காலம்,


சிட்டுக்குருவிகளாய் கொட்டமடித்து திரிந்த காலம்,

வண்ண வண்ணக் கனவுகளை

வெள்ளைச் சீருடையில் சுமந்து திரிந்த காலம் ,

ஒற்றைக் கொய்யாவை ஆறு பேராய் பகிர்ந்துன்ற காலம்,

வீட்டுபாடம் எழுதமறந்து,அடிவாங்கி அழுதுநின்ற கோலத்தில்கூட ,

நண்பனுடன் நகைச்சுவை பகிர்ந்து கொண்ட காலம்,

தாவணி போட்ட வண்ணத்துபூச்சி ,

முதன் முதலாய் வெட்கம் பூசிய காலம்,
யாருமறியாமல் ரகசிய புன்னகைகள் பரிமாறி கொண்ட காலம் ,

இன்பம், துன்பம்,ரகசியம்,குறும்பு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட,

வாழ்வின் பசுமையான காலம்...பள்ளி பருவ காலம்!!



பள்ளி எனும் விருட்ஷகத்தில்,

புது மலராய் பூத்துக் குலுங்கியவர்கள், இன்று

வாழ்க்கை, வசதி எனும் காற்றில் தூக்கி எறியப்பட்டு,

உலக உருண்டையில் ஒவ்வொரு மூலையில் சிதறி கிடக்கிறோம்.....

கால வரை அறியாமல்,

காற்று மழை தெரியாமல்,

கண்ணாடிக் கதவிற்குள் கைதியாகி,

வாழ்க்கை சந்தையில் வியாபார பொருளாகி,

முகம் தெரியா நட்பை, இணையத்தில் தேடுகிறோம்

Wednesday, April 21, 2010

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை-Very Nice song

Movie:Angaadi theru
Song:Aval appadi ontrum
Singers:Prasanna
Music:G.V.Prakash kumar &Vijay antony
Actors:Mahesh,Anjali
Lyricist:Na.Muthukumar
 
 
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை


அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை

ஆனால் அது ஒரு குறையில்லை

(அவள்..)



அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

(அவள்..)



அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை

நான் காவலிருந்தால் தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை

நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை

அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை

அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை

கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை

(அவள்..)



அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை

அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை

அந்த அக்கரைப்போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை

அவள் இல்லாமல் சுவாசமிலை

அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை
http://www.youtube.com/watch?v=snZjsVaif0k

Monday, March 1, 2010

எப்பூபூபூடி...

'முயன்றால் முடியாதது இல்லை'
இறுதிவரை முயற்சி செய்தேன்...
கிடைக்கவில்லை அவள் இதயம்.
'தோல்வியே வெற்றிக்கு முதல்படி'
கிடைத்தது

அவள் "தங்கையின்" இதயம்..

இறைவன் எனும் கலைஞன்

இதயமில்லா மனிதனின்
இயந்திர வாழ்க்கை கண்டு மனதில் புழுக்கம்.
காற்று வரக் கதவை திறந்தேன்..
காற்றோடு கவிதை வந்தது.

இரவு நேர இனிய சாரலில்,
நிலவொளியின் பால் மழையில் நனைந்தது சாலை..

குயில்கள் பாட்டிசைக்க,
கொடிகள் நடனமாட,
செடிகள் தலையாட்டி ரசித்தது,
பூக்கள் புன்னகை சிந்தியது,
இயற்க்கையின் அரங்கேற்றம் கண்டு,
இலைகள் எல்லாம் கைதட்டி பாராட்டியது..

இயற்கைதான் எத்தனை அழகு!!!
ஒவ்வொரு படைப்பிலும் அதிசயம் படைத்த,
இறைவன்தான் எத்தனை மகா கலைஞன்!!

இனி ஒரு பிறவி எனக்கிருந்தால்..
இம்மானுட பிறவி மட்டும் வேண்டாம்..
இயற்க்கை அன்னையின் மடியில்,
ஒரு இலையாய்.. மலராய்..கனியாய்..
பிறக்க வரம் வேண்டுகிறேன்..

என்ன வாழ்க்கை?

ஆயிரம் கரங்கள் கொண்டு அணைக்கும்
காலைக் கதிரவனைக் காண மனமில்லை,
போர்வைக்குள் புதைந்து கிடக்கிறான்..
காதலாய் வந்து முத்தமிடும்
தென்றலை ரசிக்க நேரமில்லை
கண்ணாடிக் கதவிற்க்குள் கைதியாகிறான்..

ஒற்றை மல்லிகை சரத்திற்கு ஏங்கும் மனைவிக்கு 
சற்றே புன்னகை உதிர்க்க தோன்றவில்லை..
இயந்திரத்துடன் இணைகிறான் ஒரு இயந்திரமாய்.

வாழ்க்கையை வாழத் தெரியவில்லை..
வசதியை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்...

Sunday, February 28, 2010

முதல் காதல் தோல்வி!

என்றாவது ஒரு நாள் நிகழ்ந்தே
தீரும் மரணமும் காதலும்,
நீயும் வந்தாய் என் வாழ்வில்.
உன்னை சந்தித்த அந்த தருணங்கள்,
எனக்குள் நீ ஏற்படுத்திய சலனங்கள்,
உனக்குள் நான் தொலைந்த பொழுதுகள்,
என்னை பரிதவிக்கவிட்ட உன் பார்வைகள்,
என் உயிரைக் குடித்த உன் சிரிப்புகள்...
இவை எல்லாமே கனவாய் போய் விடக்கூடாதா....
அளவில்லா அன்பினால் அஸ்திவாரமிட்டு
சின்ன சின்ன ஆசைகளால் நான்
கட்டிய அழகிய வீட்டை,
முழுதாய் கட்டி முடிக்கும் முன்பே,
நீ இடித்து தரைமட்டமாக்கிய அந்த நாள்...
கனவாகவே போய்விடட்டும்...
"இல்லை" எனற ஒற்றை வார்த்தையால்
என்னை சுக்கு நூறாக்கி
கதறி அழ வைத்த அந்த நாள்
கனவாகவே போய்விடட்டும்...
இருமனமும் ஒருமனமாகி
அன்பில் கலப்பதுதான் காதல்.
நமக்குள் இருந்தது 'காதல்' இல்லை...என்று
"நீ" சொன்னால் நான் மறுக்க இயலாது..
ஒருவேளை நாம் நண்பர்களாகவே இருந்திருப்போம்...
உன் பார்வைகள் என்னை ஊடுறுவாமல் இருந்திருந்தால்...
உன் ரகசிய புன்னகைகள் என்மேல் படராமல் இருந்திருந்தால்..
உன் ஒவ்வொரு பார்வைக்கும்
என்னுள் புது புது அர்த்தங்கள் கொண்டேன்.
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை அறிய முயன்றேன்.. உன் மனம் அறியாமலே...
தவறு உன்னுடையதா..? என்னுடையதா..?
எங்கெ? எப்பொழுது?ஏன் நிகழ்ந்தது? எதுவாயினும்...
உன்னைபோல் எனக்கும்
"முதல் காதல்" தோல்வி...

மழை..!!!

உன் நினைவுகளின் மழையில் நனைகிறேன்...

உன் இமை குடை கொண்டு வா....

உன் இதழ்களால் என் வெட்கம் துடை....

உன் மூச்சின் வெப்பத்தில் எனை குளிர்காய விடு....

------
நிலமகள் பருவமடைந்ததால்...

வானம் நடத்தும் நீராட்டுவிழா.
-----
தார்ச்சாலையில் ஜலதரங்கம்,

மத்தளமாய் இடிமுழக்கம்,

வண்ணஒளிக்கீற்றாய் மின்னல்கள்,

இசைமழையில்

ஆனந்த கூத்தாடும்

தெருவோர மரக்கிளைகள்..
-----
மேகத்திற்கும் காதல் தோல்வியா...?


இடியாய் கதறி,

அடைமழையாய்...

அழுது தீர்க்கிறதே!!!!

Friday, February 26, 2010

தவிப்புடன் சில தருணங்கள்..

கிண்டலும்..,கேலியுமாய்..,
நம் பேச்சுகள் நகர்ந்தாலும்,
மனதுக்குள் ஒரே படபடப்பு...தவிப்பு...எப்பொழுதும்.
பேசி முடித்து, சிரித்து, ஓய்ந்த பின்,
மௌனமாய்...நீ ,
பார்க்கும் ஒற்றை பார்வையில்
தவித்து போய்விடுகிறேன் நான்.
உரிமையாய் சண்டை போடுகிறாய்..
செல்லமாய் சீண்டி பார்க்கிறாய்..
ஆழமான பார்வைகளால் என் உயிரைக் குடிக்கிறாய்..
நமக்குள் என்ன உறவென்று மட்டும் சொல்லாமல் வதைக்கிறாய்..

வாலிபம் ஒரு முரட்டு குழந்தை..

வாலிபம் ஒரு முரட்டு குழந்தை..
தொடாதே... என்றால்,
எட்டி பிடிக்கும்
சுடும்... என்றால்,
தொட்டு பார்க்க அடம் பிடிக்கும்
ஆடி..,ஓடி..,ஆட்டம் முடிந்து,
அல்லல்பட்டு, அனுபவம் உணர்ந்து,
இறுதியில் தலை சாய்க்க
தாய்மடி தேடும்

Thursday, February 25, 2010

தீண்டல்!!

உடலோடு உடல் பிணையும்
மோகம் எனக்கில்லை,
ஆனாலும்......
வேண்டும் ஒரு தீண்டல்
நீ எனைக் கடக்கும் போது,
உன் மூச்சின் வெப்பம்.

மார்கழி தரிசனம்

முன்பனி விழும் மார்கழி மாதம், அன்பே! நீ வருகிறாய் ஆடையெங்கும் நீர் சொட்ட,
உனைக் கண்ட என்னுள் ஆசை சொட்ட,
இரு கரம் கூப்பி இறைவன் முன் நீ நீற்க,
காதல் வரம் வேண்டி உன்முன் நான் நிற்க,
அங்கு சுகமாய் ஒலிக்கிறது காதல் சுப்ரபாதம்..

உன்னுடன் என் பயணம்..

சில மணி நேரம் தான் உன்னுடன் என் பயணம்.
அதில் நீ தந்த அனுபவம்
என்னுள் என்றும் பசுமையாய்..
குறுகியகால நம் சந்திப்பில்,
என் எண்ணம் முழுவதும் நீயே நிரம்பி வழிகிறாய்...
உன்னுடன் முடியா விட்டாலும்...,
உன் நினைவுகளுடனே தொடர்கிறது
என் ஒவ்வொரு பயணமும்....

Wednesday, February 24, 2010

தோழி!.உனக்கொரு மடல்..

என் உயிர் தோழியே,


நலம்,உன் நலமே விழையும்

உன் தோழி வரையும் மடல்.



பிரியமானவளே,

இனிமையான உன் பேச்சும்,

திவிட்டாத உன் நட்பும்,

என் மனதை விட்டு என்றும் நீங்கா..



குட்டை பாவாடையும்,

ரெட்டை பின்னலுமாய்,

துவங்கிய நம் நட்பு -இன்று

ஆலவிருட்சகமாய்...



சுகமோ..., துக்கமோ..,

பகிர்ந்து கொள்ள தேடும் முதல் உறவு

நட்பு..

ஏனோ..இதுவரை உன் சுகத்தை மட்டுமே

என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாய்...

ஒருவேளை....

துக்கத்தின் நிழல் கூட நம் நட்பில்

பட விரும்பவில்லையோ!!!!



இன்று உன் வாழ்வின் மங்கள நாள்..

உன் மனம் கவர்ந்த மணாளனுடன்..

கைகோர்க்கும் இனிய திருநாள்..



சுற்றம் சூழ்ந்திருக்க..,

மனம் குறுகுறுக்க..,

ஓடி ஒளிந்து..,அரை குறை பார்வை பார்த்து,

திக்கி திணறி பேசியதெல்லாம்

இன்றோடு முடிந்தது...

தளிர்விரல் கோர்த்து,காதோரம் ரகசியம் பேச..,

இதோ உன் அத்தான் உன் அருகில்..



உன் திருமண பரிசாய்..

என் கவிதை கேட்டாய்..

நம் நட்பை கவிதையாய் வரைய..

நான் ஒன்றும் கள்ளிக்காட்டு கம்பன் கிடையாது..,

எனவே மடலாய் அனுப்புகிறேன்..



உன் திருமண அழைப்பிதலுக்கு ,

பதிலாய் எனது நட்பிதலை நான் அனுப்ப,

அதைக் கண்டு நீ இதழ் மொட்டவிழ்க்க,

முத்துக்களை சிந்திய உன் குறுநகையில்,

பொன்நகையும் பொலிவிழக்க,

வானவில் கன்னத்தில் கோலமிட..,

இமைகள் சிறகடிக்க,

இதயம் படபடக்க,

உறவுகள் இணையும் உன்னத பொழுதில்,

எங்கோ நின்று ரசிக்க அங்கே நானில்லை..

என் நினைவுகள் மட்டுமே..



சற்று நேரம் அமைதியாய் இரு.,

மௌனம் கலையாதே.,

உன்னை மலரென சுற்றி வரும்

வண்டுகள் ஏமாந்துவிட போகின்றன..



புரியாமல் இமையடித்து பார்த்தாய்..

பட்டாம்பூச்சி தோற்றது என்றேன்..

வெட்கம் என்று முகம் மூடி கொண்டாய்..



நீ என்றதும் நினைவில் வருவது

உன் புன்னகை பூமுகம் தானடி..

இன்று தவழும் இந்த புன்னகை,

என்றும் நிலைத்திருக்கட்டும் உன் வாழ்வில்..



இல்லறம் எனும் கோவிலில்,

இதயம் எனும் அகல்விளக்கில்,

அன்பு எனும் நெய் விட்டு,

மகிழ்ச்சி எனும் ஒளியேற்ற,

மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும்

என் இனிய தோழிக்கு,

என் மனமார்ந்த வாழ்த்துகள் ...

உன்னிடம் மட்டும்..

கண்களில் மின்னல்....


இதயத்தில் படபடப்பு ..,

எல்லாம் உன்னை பார்க்கும் போது மட்டும் தான்...

இதழ்களில் மௌனம் ..,

கண்களில் கவியரங்கம்..,

எல்லாம் உன்னிடம் பேசும் போது மட்டும் தான்...,

ஊரே கேட்க உரக்க பேசுபவள்...

உன்னிடம் மட்டும் ஊமையாய் போகிறேன்...

அருகில் நீயின்றி...

கடற்கரை மணல்...


தாவி வரும் அலை...

பௌர்ணமி நிலவு..

இதமான மெல்லிசை...

சுகமான தென்றல்...

எதையும் ரசிக்க மனமில்லை...

அருகில் நீயின்றி...

உறவு....

எத்தனை எத்தனை உறவுகள்...,


எத்தனை எத்தனை நட்புகள்..,

அத்துடன் பகையும்...

ஒரு உறவை தேடி நாம் சென்றால்...

இன்னொரு உறவு பகையாகிறது....

எல்லா உறவும் உறவே என்று உறவாட யாரும் இல்லை...

நட்பை கூட நாக்கை கடித்து கொண்டு சொல்ல வேண்டியிருக்கிறது...

உறவுக்குள் உண்மையில்லை...

போலியான முகங்கள்...போலியான சிரிப்புகள்...

யாதும் ஊரே யாவரும் கேளிர்...

உண்மையை உணர யாருக்கும் மனமில்லை...

தவிப்பு

தூரத்தில் நீ இருக்கையில் உனக்காக ஏங்கிய இதயம்...

அருகில் நீ வந்ததும் ஆயிரம் மடங்காய் துடிக்கிறது....

கண்ணாடி முன் நின்று பேசிய வார்த்தைகள் எல்லாம்

உ(ன்)னை கண் முன் கண்டதும் கை விட்டு விட

மௌனம் மட்டுமே துணையாகிறது...

வருகிறேன் எனக் கூறிச் செல்கிறாய்...

பாதி வழி சென்று திரும்பி புன்னகைகிறாய்....

குழந்தையாய் அடம் பிடிக்கிறது மனம்... உன்னுடன் செல்ல..

வலிகள்...

வார்த்தைகளில் கத்தி ஏந்தி..,


இதயத்தை குத்திக் கிழிக்கும் உறவுகள்...,

உணர்வுகளை....சல்லடை போட்டு..,

சலித்து பார்க்கும் சுற்றம்...

கண்ணீர் சிந்தும் நிமிடங்களில்...

கை நீட்டி துடைக்க விரல்கள் இல்லை...

சுமைகள் பாரமாய் கணக்கும் போது,

ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லை...

கடிகார முள்ளோடு...போட்டி போடும்...

இயந்திர மனிதனுக்கு...

இதயத்தின் உணர்வுகளை..வாசிக்க நேரமில்லை...

இதழ் கடித்து..கண்கள் மூடி அழும் போது...,

என் இமை வழியாக வடிவது...

கண்ணீர் மட்டுமல்ல...

என் உயிரும்...வார்த்தைகளில் வடிக்க முடியாத வலிகளும் தான்...

என் பிறந்த நாளுக்கு நீ தரும் பரிசில் இல்லை..நம் நட்பு...

துன்பம் வரும் வேலையில்....

எனக்காக நீ ஒதுக்கும் சிலமணித் துளிகளில் தான் இருக்கிறது....

உன் பெயர்...

உள்ளம் ஓராயிரம் முறை கூறினாலும்....


உதடு ஏனோ ஒரு முறை கூறவும் மறுக்கிறது...

உன் பெயர்...

ஆசை!!!

யாருமில்ல சாலையில்...


உன் விரலோடு என் விரல் கோர்த்து நடக்க ஆசை ...,

மஞ்சள் நிற மாலை வேலையில்....

பூமர நிழலில் உன் தோலில் தலை சாய்க்க ஆசை...,

நீ பேசும் வேலையில்....

உன் எதிர் அமர்ந்து இமை மூடாமல் உன் விழி காண ஆசை...,

கலையாத உன் கேசத்தை கலைத்து விட்டு...

என் விரலால் உன் தலை கோத ஆசை...,

உன் இதழ் பதித்த கனியில் நீ அறியா வண்ணம் என் இதழ் பதிக்க ஆசை...

சின்ன சின்ன சண்டை போட்டு உன்னை நான் சீண்டி பார்க்க ஆசை...

கோபம் கொண்ட வேலையில் உன்னிடம் கொஞ்சி பேச ஆசை...,

முடி கொண்ட உன் மார்பில் என் முகம் பதிக்க ஆசை...

மோகம் வந்தால் உன் அங்கம் படர விட ஆசை...

சோகம் வந்தால் உன் மடியில் விழுந்து விட ஆசை...

இன்பமோ துன்பமோ உன்னோடு மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசை...

எத்தனை பிறவிகள் வரினும்...

உன் உயிரில் என் உயிரும் கலந்து விட ஆசை...

ஏனடி கூற மறுக்கிறாய்?!

உன் வளையல் கொலுசொலி கூறியது...


என் நினைவுகளால்..பறிபோன உன் இரவுகளை...

உன் வீட்டு கண்ணாடி கூறியது...

என் பெயர் சொல்லி...,உன் கண்ணம் சிவந்த நாட்களை...

நீ மட்டும் ஏனடி கூற மறுக்கிறாய்...

என் மேல் உள்ள உன் காதலை...

காத்திருக்கிறேன்...

மேற்கில் சூரியன் மயங்கிய..மஞ்சள் நிற மாலை வேளையில்...


ஓர் அற்புத நாளில்....சந்தித்து கொண்டன நம் விழிகள்..,

சந்தித்த பொழுதுகள் என்னவோ...நிமிடங்கள் தான்....

பார்வையில்...பரிமாறி கொண்டவை ஆயிரம்...

ஒரு நொடி பார்வையில்,ஓராயிரம் கதைகள் பேச ,

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

பார்வையின் தாக்குதல் இருவருள்ளும்...

அன்று இயல்பாய்...பதிந்த உன் உருவம்...ஏனோ..

இதயத்தை விட்டு விலகவே இல்லை...

வளர்பிறையாய் உன் நினைவுகள் என்னுள் மாற..

தேய்பிறையானேன் நான்...

ஏங்கிய பல நாட்கள் நேராத நம் சந்திப்பு...

எதிர்பாராமல் நிகழ்ந்தது மீண்டும்...

இரு ஜோடி விழிகள் பேசிய போதும்...

மொழிகள் பேசும் வாய்ப்பு ஏனோ அமையவில்லை...

தவிப்பாய் பிரிந்தோம்...தனித்தனியே...

மீண்டும் சந்திக்குமா.. நம் விழிகள்...

வழியை நோக்கி காத்திருக்கிறேன்...

ரோஜா மலரே...

என்னாயிற்று உனக்கு...எங்கே உன் வாடிக்கை...


எப்பொழுதும் எனைக் கண்டதும் தலையாட்டி சிரிப்பாயே...

எங்கே அந்த குறுநகை...

எப்பொழுதும் தேன் சொட்டும் உன் இதழ்களில் ,

இன்று சோகம் சொட்டுவதேன்...

என்றும் ஆயிரம் கவிதைகள் பேசும் நீ...

இன்று மௌனம் பேசுவதேன்...

இரவு நேர இனிய சாரலின் துளிகள் மட்டும் உன் மேனியில்...

கலையான உன் தவத்தை கலைத்து விட்ட

காற்றின் மீது கோபமா...இல்லை...

உன் தேனின் சுவையை பருகிவிட்ட வண்டின் மீது கோபமா...

பதில் கூறடி என் ரோஜா மலரே....

குட்டி நிலவு


எங்கள் வீட்டு தோட்டத்தில் மொட்டு ஒன்று மலர்ந்தது...


எங்கள் வானத்தில் நட்சத்திரம் ஒன்று நிலவாக ஜொலிக்கிறது..,

கட்டிலுக்கு பக்கத்தில் தொட்டில் முளைக்கிறது...

உலகில் உள்ள மலர்களின் மென்மை எல்லாம்

ஒன்றாய் சேர்ந்து மழலையாய் பிறந்திடுமோ...

குட்டி நிலவொன்று எங்கள் வீட்டு தொட்டிலில் தவழ்ந்திடுமோ...

சிட்டு குருவியின் அழைப்பில் எங்கள் உலகம் விழித்திடுமோ...

பொக்கைவாய் சிரிப்பில் எங்கள் சொர்க்கம் தெரிந்திடுமோ...

உலகின் மொத்த இன்பங்களை எல்லாம் கொண்டு

எங்கள் தேவதை பிறந்திடுவாளோ....

புன்னகை..


அழகாய் தான் இருந்தாய்...


மெல்ல தலை சாய்த்து ...,

நெற்றி புருவம் உயர்த்தி..,

சின்னதாய் புன்னகைத்த போது..,

நான் தான் உடைந்து விட்டேன்...

நினைவு

மறக்க நினைக்கும்

ஒவ்வொரு நொடியும்

மறந்தே போகிறேன்....

உன்னை மறப்பதற்கு....

கவிதை எழுத வேண்டுமா....

கவிதை எழுத வேண்டுமா....

கம்ப சூத்திரம் பயில வேண்டாம்....கடவுள் அருளும் வேண்டம்...

காதல் செய்...கன்னியை அல்ல...உன்னை...

உன்னை நீ நேசி...

இயற்கையின் மீது காதல் கொள்...

சிறு புல்லில் முத்துகளை சிதறியுள்ள காலை பனி துளியில்...,

மழை தன் கடைசி துளிகளை சிந்தி விட்ட ஜன்னல் கமபிகளில்..,

மெதுவாய் எட்டி பார்க்கும் கதிரவனில்...

இல்லாத முகவரியை தேடி அலையும் மேகங்களில்...

சிலருக்கு ஆறுதல்...சிலருக்கு கவிதை...சிலருக்கு புன்னகை..சிலருக்கு

சந்தோஷம்...

இப்படி எல்லாவற்றையும் கொடுத்து வலம் வரும் அந்த வெண்ணிலவில்...காதல் கொள்...

புதிதாய் பூத்த மலரை கண்டால் புன்னகை சிந்து...

தினமும் உன் வீட்டு தொட்டி செடியின் நலம் கேள்....

குமரி பெண்ணின் வெட்கம் ரசி...

குழந்தையின் மழலை சொல் கேள்...

அறிமுகமில்லா நபரிடம் அன்பு கொள்...

கார்மேகம் பன்னீர் தெளித்தால்...

கருப்புக்கொடி காட்டாதே...

மாலை நேரம் நடை பழக..

நிலா தோழியின் கை கோர்த்து கொள்...

வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து பார்...

கவிதை உன் வீட்டு செடியிலும் பூக்கும்...