Monday, March 1, 2010

எப்பூபூபூடி...

'முயன்றால் முடியாதது இல்லை'
இறுதிவரை முயற்சி செய்தேன்...
கிடைக்கவில்லை அவள் இதயம்.
'தோல்வியே வெற்றிக்கு முதல்படி'
கிடைத்தது

அவள் "தங்கையின்" இதயம்..

இறைவன் எனும் கலைஞன்

இதயமில்லா மனிதனின்
இயந்திர வாழ்க்கை கண்டு மனதில் புழுக்கம்.
காற்று வரக் கதவை திறந்தேன்..
காற்றோடு கவிதை வந்தது.

இரவு நேர இனிய சாரலில்,
நிலவொளியின் பால் மழையில் நனைந்தது சாலை..

குயில்கள் பாட்டிசைக்க,
கொடிகள் நடனமாட,
செடிகள் தலையாட்டி ரசித்தது,
பூக்கள் புன்னகை சிந்தியது,
இயற்க்கையின் அரங்கேற்றம் கண்டு,
இலைகள் எல்லாம் கைதட்டி பாராட்டியது..

இயற்கைதான் எத்தனை அழகு!!!
ஒவ்வொரு படைப்பிலும் அதிசயம் படைத்த,
இறைவன்தான் எத்தனை மகா கலைஞன்!!

இனி ஒரு பிறவி எனக்கிருந்தால்..
இம்மானுட பிறவி மட்டும் வேண்டாம்..
இயற்க்கை அன்னையின் மடியில்,
ஒரு இலையாய்.. மலராய்..கனியாய்..
பிறக்க வரம் வேண்டுகிறேன்..

என்ன வாழ்க்கை?

ஆயிரம் கரங்கள் கொண்டு அணைக்கும்
காலைக் கதிரவனைக் காண மனமில்லை,
போர்வைக்குள் புதைந்து கிடக்கிறான்..
காதலாய் வந்து முத்தமிடும்
தென்றலை ரசிக்க நேரமில்லை
கண்ணாடிக் கதவிற்க்குள் கைதியாகிறான்..

ஒற்றை மல்லிகை சரத்திற்கு ஏங்கும் மனைவிக்கு 
சற்றே புன்னகை உதிர்க்க தோன்றவில்லை..
இயந்திரத்துடன் இணைகிறான் ஒரு இயந்திரமாய்.

வாழ்க்கையை வாழத் தெரியவில்லை..
வசதியை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்...