Friday, December 3, 2010

எப்படி சொல்வது என் காதலை....



மேனியெனும் வீணையில்- உன்
விரல் மீட்டும் நாதத்தில்,
விழி மயங்கும் நேரத்தில்,
இதழால் இமை திறக்கிறாய்...
நாணத்தில் நான் தவிக்கும் வேளையில்,
காதோரம் காதல் உரைக்கிறாய்...
உன்னிடம் எப்படி சொல்வது
என் காதலை....

உன் வாசம்..என் சுவாசம்...





நீ விடைபெற்று
சென்ற பின்னும்
என்னுடனே தொடர்கிறது..,
உன் மூச்சுக்காற்றின் வாசமும்.....
நீ விட்டு சென்ற
உன் நினைவுகளும்...

Tuesday, November 16, 2010

இதை விட ஒரு அவமானம் இந்தியாவிற்கு வேண்டாம்...

செய்தி :
காமன்வெல்த் போட்டிக்கு இன்னொரு பின்னடைவு. ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், 27 கட்டுமான தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் காமன்வெல்த் போட்டி வரும் அக்டோபரில்(3-14) நடக்கிறது. இதற்கான மைதானங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்து உள்ளது. தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதால், போட்டிக்கான கட்டடங்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. உதாரணமாக மிக முக்கியமான ஜவஹர்லால் நேரு மைதானத்தின் மேற்கூரைப்பகுதி நேற்று முன் தினம் இடிந்ததில், துணை கமிஷனர் உள்ளிட்ட இரண்டு போலீசார் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இம்மைதானத்தின் வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் மாலை 3.10 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் 27 பேர் காயமடைந்தனர்.

விசாரணைக்கு உத்தரவு: சுமார் 95 மீட்டர் நீளம் கொண்ட இந்த தொங்கு நடை @மம் பாலம், மைதானத்தின் "பார்க்கிங்' பகுதி மற்றும் தெற்கு டில்லியின் சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்தது. இதனை ரூ. 10.5 கோடி செலவில் சண்டிகரை சேர்ந்த பி.என்.ஆர்., இன்பிரா என்ற நிறுவனம் கட்டி வருகிறது. டில்லி அரசின் பொதுப்பணித் துறை தான், ஒப்பந்தத்தை பி.என்.ஆர்., நிறுவனத்துக்கு அளித்தது. தற்போதைய விபத்தை தொடர்ந்து, பொதுப்பணித்துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விபத்து எப்படி?:  மேம்பால விபத்து குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒருபகுதியில் "கான்கிரிட்' கலவை பூசும் போது, பாலம் இடிந்து விழுந்ததாக, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். டில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ் குமார் கூறுகையில்,""தொழிலாளர்கள் ஒரே இடத்தில் "கான்கிரிட்டை' கொட்டியதால் விபத்து ஏற்பட்டது. போட்டி துவங்குவதற்கு முன் பாலத்தை சரி செய்து விடுவாம்,''என்றார். (அப்போ  ஒரு கான்கிரிட் கலவையை  தாங்குற சக்தி கூட நீங்க கட்டின பாலத்திற்கு இல்லைன்னு ஒத்துக்குறீங்க... )

மழை காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,""கடந்த 20 நாட்களாக டில்லியில் பெய்த மழை காரணமாக பாலம் இடிந்திருக்கலாம்,''என்றார்.
இக்கருத்தை பொதுப்பணி துறை இன்ஜினியர் ராகேஷ் மிஸ்ரா மறுத்தார். இவர் கூறுகையில்,""மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு மழை காரணமல்ல. ஏதோ தவறு நடந்திருக்கிறது. இது பற்றி அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இதனால், காமன்வெல்த் போட்டிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது உண்மை தான் ,''என்றார். ( என்னத்த சொல்ல ....)

அசுத்தமான விளையாட்டு கிராமம் : காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் 8 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் மிகவும் அசுத்தமாக உள்ளது. இங்கு பணிகள் நிறைவடையவில்லை. ரூம்களின் கதவுகள் திறந்து கிடக்கின்றன. மெத்தையில் தெரு நாய் உறங்குகிறதாம். கழிப்பறைகள் துர்நாற்றம் அடிக்கிறதாம். இதனால் நியூசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இங்கு வாழ்வதற்கு தகுதியற்ற நிலை காணப்படுவதால், தங்குவதற்கு ஓட்டல் ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தியுள்ளன. இது குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல், கேபினட் செயலர் சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்துக்குள் சரி செய்யும்படி கெடு விதித்துள்ளார்.
இது குறித்து ஒருங்கிணைப்பு கமிட்டியின் செய்தி தொடர்பாளர் லலித் பனோட் கூறுகையில்,""அவமானப்பட வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. சுத்தப் படுத்தும் பணியை துவக்கி விட்டோம். இன்னும் 36 மணி நேரத்தில் பணிகள் முடிந்து விடும்,''என்றார்.


விலகினார்  சாமுவேல்ஸ் :பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்னை காரணமாக டில்லி காமன்வெல்த் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வட்டு எறிதல் வீராங்கனை டேனி சாமுவேல்ஸ் விலகியுள்ளார். ஏற்கனவே ஜமைக்காவின் தடகள வீரர்களான உசைன் போல்ட், அசபா பாவல் போன்றோர் விலகியுள்ளனர்.

வெடிமருந்துடன் ஆஸி., நிருபர் : காமன்வெல்த் போட்டிக் கான பாதுகாப்பு ஏற்பாடு மட்டமாக இருப்பதை ஆஸ்திரேலிய "சேனல் 7' குழுவினர் அம்பலப்படுத்தி உள்ளனர். இதன் நிருபர் மைக் டபி, வெடிமருந்து பையுடன் நேரு மைதானத் துக்குள் சென்றுள்ளார். இவரை போலீசார் யாரும் சோதனை செய்யவில்லை யாம்.

Saturday, September 4, 2010

அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை..!!

தமிழக அரசியல் தலைவர்கள், தங்கள் மேடைப் பேச்சுக்களில், "அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை' என கேட்குமளவுக்கு, அநாகரிக வார்த்தைகள் பேசுவதை, மக்கள் கொஞ்சம் கூட விரும்பவில்லை (அதை பற்றி யார் கவலைபட போகிறார்கள்...). அனுபவமிக்க தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூத்த வயதுடைய முதல்வரை, "தீயசக்தி' என, முன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரை, "வாய்தா ராணி' என ஆளுங்கட்சியினரும் பட்டங்களிட்டு வசைபாடுவதை நிறுத்திவிட்டு, ஆட்சியின் குறை நிறைகளை மட்டும் பேசினால் நல்லது.
வெறும் 2,653 வி.ஏ.ஓ., வேலைக்கு, 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது வேதனையளிக்கிறது. வேலை இல்லா திண்டாட்டங்களை ஒழிப்பதே எமது லட்சியமென்று மேடைகளில் தலைவர்கள் முழங்குவதை விட்டு விட்டு, ஒருவருக்கொருவர் பகைமைச் சொற்போர் நடத்தி வருவது, ஆரோக்கியமான அரசியல் தானா என சிந்தித்தால் நல்லது(ம்ம்ம்...அதுக்கு வழியே இல்ல..).

எதிர்வரும் தேர்தலில், எந்த மாதிரியான இலவசங்களைக் கொடுத்தால், அப்பாவி மக்களை மயக்கலாம் என சிந்திப்பதை விட்டு விட்டு, வேலை வாய்ப்பற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையை உருவாக்கித் தர யோசித்தால் நல்லது.
"வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை வழங்குறோம்' என எந்தக் கட்சியாவது உறுதி அளித்தால், அக்கட்சியினருக்கு தங்கள் ஓட்டுகளை அள்ளித் தர மக்கள் தயாராக உள்ளனர்.
வேலை வாய்ப்பின்மை ஒன்று தான், நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு காரணம் என்பதை, நமது தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எல்லா தலைவர்களுமே இன்று(1-க்கு 4 சொந்த வீடு, சொந்த கல்லூரி, சொந்த நிறுவனம் அப்டீன்னு) தன்னிறைவோடுதான் இருக்கின்றனர்; இனியாவது, மக்களைச் சென்றடைய வேண்டிய உருப்படியான திட்டங்களை, இவர்கள் கொண்டு வர வேண்டும்.

தமிழக முதல்வர் சில நாட்களுக்கு முன், "மதுவிலக்கு கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும்' என்ற சர வெடியை கொளுத்தி விட்டார். டாஸ்மாக் ஊழியர்கள், எங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுமோ என்ற அச்சத்தில்(அவனுக்கு அவன் பொழப்பு..), தொடர் போராட்டம் என்பதை மாற்றி, ஒரு நாள் போராட்டம் என அறிவித்து அமைதியாயினர்.
"பூரண மது விலக்கு' என குரல் எழுப்பிக் கொண்டிருந்த ராமதாஸ், முதல்வர் அறிக்கை, தனக்கு வெற்றி(?) என கனா கண்டார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தோழமை கட்சியான காங்கிரஸ் போன்றவை, மவுனமாகி விட்டன.

தமிழகத்தை சுற்றியுள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில், மதுக் கடைகள் வெகு ஜோராக நடக்கும்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த முடியாது.
டாஸ்மாக் வருமானம் தான், பல இலவச திட்டங்களுக்கு கை கொடுக்கிறது. மக்களுக்கு கிடைக்கும் இலவச திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுபவர்கள் தான், "பூரண மது விலக்கு' என்று அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர்(வேறென்ன...).

தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களின் குறைகள் வெளிவராமல் இருக்க, தாக சாந்தியாக இருக்க போவது, டாஸ்மாக் கடைகளிலிருந்து வரும் தேவாமிர்தம் தான்.
இனி எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பூரண மதுவிலக்கு ஒரு கானல் நீர் தான். மொத்தத்தில், சமுதாயச் சீரழிவு, மக்கள் உடல் நலம் எல்லாம், பின் தள்ளப்படுகின்றன.

Tuesday, August 24, 2010

என்ன அநியாயம் இது!!!ஜனங்களே...நல்லா கேளுங்க..

செய்தி:  எம்.பி.,க்களுக்கு மாத அலவன்ஸ் மேலும் உயர்வு : வரியும் கட்ட வேண்டாம் என மத்திய அரசு முடிவு

எம்.பி.,க்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
"இந்த சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும்'(நல்லா note பண்ணிக்கோங்க...)  என,பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது.
ஆனால்,அந்த அளவுக்கு உயர்த்தினால்,
மக்களிடையே பெரும் அதிருப்தி உருவாகும் என்பதால்(ஓஓ.....அதை பத்தி கூட கவலை படறாங்களா.. மக்களை விடுங்க..முட்டாள்கள்...இதை பத்தியெல்லாம் கவலை பட மாட்டங்க.. அடுத்த வாரம் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில யாரு செயிப்பாங்கனு யோசிச்சிட்டு இருப்பாங்க.),தற்போது வாங்குவதை மூன்று மடங்கு அதிகமாக உயர்த்தி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.இதற்கு மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.(அட பாவிங்களா...நாங்க வருசம் முழுசும் ராத்திரி பகலா வேலை செஞ்சாலும் 10% increment குடுக்க மாட்டேனு சொல்றானுக....கேட்டா பொருளாதார நெருக்கடி-னு சொல்றனுக...உங்களுக்கு 300% ???என்ன அநியாயம் இது?) 
 அத்துடன்,தொகுதி மற்றும் அலுவலக அலவன்ஸ்கள் மாதம் தலா 20 ஆயிரம் ரூபாய் என்பது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. (இது வேறயா...)

இருந்தாலும்,"இந்த சம்பள உயர்வு போதாது,(அடங்கொக்கா மக்கா...!!) பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்தபடி,
80 ஆயிரத்து ஒரு ரூபாயாக எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்' என வலியுறுத்தி, கடந்த வாரம் ராஷ்டிரிய ஜனதா தளம்,சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர்.
(இந்த மாதிரி மக்கள் பிரச்சனைக்கும் கொஞ்சம் போராடுங்களேன்..பார்க்கலாம்...)
இதையடுத்து, அந்த கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (இதுல ஆலோசனை வேறயா....எல்லாம் பேசி வச்சது தானே...)
பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. (அவர் பாவம்.. என்ன பண்ணியிருக்க போறாரு..சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு... சோனியாம்மா அனுமதி தந்ததும்...சொன்ன இடத்துல Sign பண்ணியிருப்பாரு...)
இந்தக் கூட்டத்தில்,எம்.பி.,க்களின் தொகுதி அலவன்ஸ்(அப்பூடின்னா...என்னாங்கோ....இந்த ஓட்டு போட்டவங்களுக்கு ஏதாவது பண்ணுங்கனு சொல்லி குடுக்கிறதா....)  மற்றும் அலுவலக அலவன்ஸ்களை மாதம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம்,
அதாவது இரண்டும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வகை செய்யும் முன்மொழிவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இதற்கு அமைச்சரவையும் உடனடியாக ஒப்புதல் அளித்தது.(இதுக்கு மட்டும் உடனே குடுத்திருவீங்களே... ) இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையுண்டு. (இது  வேறயா....)
இதனால்,எம்.பி.,க்கள் இனி மாதம் ஒன்றுக்கு தொகுதி அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும்,அலுவலக அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் அலவன்சாக பெறுவர்.
சம்பளம் 50 ஆயிரம் ரூபாயையும் சேர்த்தால், மாதம் ஒன்றுக்கு 1.40 லட்சம் ரூபாய் பெறுவர். (ஆக மொத்தம் எங்களுக்கு மொட்டை...)
இதுதவிர, வேறு பல சலுகைகளும் உண்டு. (அதுதான் தெரியுமே...நீங்க மட்டுமில்லாம...உங்க குடும்பம்..சொந்தகாரங்க எல்லோரும் எங்க காசுல ஊரு சுத்தலாம்...உங்க அடுத்த தலைமுறைக்கும் இப்பவே எங்ககிட்டயிருந்து சுருட்டி சொத்து சேர்த்து வைக்கலாம்...)

மக்களே,நல்லா கேளுங்க... ஒண்ணுமே பண்ணாம மாசம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சம்பளமாம். நமது வரி பணம் எப்படி வீணாகிறது பார்த்தீர்களா? இது தவிர பல சலுகைகள், அதாவது லஞ்சம், ஊழல் இப்படி. இந்தியா வேகமா முன்னேறிடும். ஐந்து வருடம் பாராளுமன்ற உறுப்பினரா இருந்த போதும், வாழ்க்கைல வேண்டும் அளவுக்கு சம்பாதிச்சிடலாம். எதுக்கு வேலைக்கு போய் கஷ்டபடணும் ...
ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இணைந்துவிட்டு ,பின்னர் எம்.பி./ எம்.எல் .ஏ ஆகிவிட்டால் பின்னர் வாழ்நாள் எல்லாம் கஷ்டமே இல்லை. பதவியில் இல்லையென்றாலும் சலுகைகளும் பென்ஷனும் இவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த உயர்வுக்கு இவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்கள்?
குப்பை கூட்டும் வேலைக்கே பட்டதாரிகளை கேட்கும் நிலையில் ரவுடிசமும் ,கொலை, கொள்ளை ,கள்ளசாராயம், விபசாரம்,கடத்தல், போன்ற சமுக விரோத செயல்களில் வளர்ந்த எம்.பி. கும்பல்களுக்கு இதுபோன்ற ஒரு ஊதிய உயர்வு தேவையா? பெரும்பாலோர் கோடி கோடியாக சொத்து உள்ள "கல்வியாளர்கள்" அல்லது ஊழலில் ஊறி உப்பிய பெருச்சாளிகள்.ஒரு பன்னாட்டு விளையாட்டு விழா ஏற்பாடுகளில் எத்தனை கோடி ஊழல் ! தோண்ட தோண்ட வந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் பெற்றால் தான் ஒரு எம்.பி. குடும்பம் நடத்த முடியும் என்றால் சாதாரண ஜனங்கள் என்ன செய்வது ? எங்கே போவது.?
பாரத தாயே.. என்னதான் நடக்கிறது இந்த பாரத தேசத்தில்....!