Sunday, February 28, 2010

முதல் காதல் தோல்வி!

என்றாவது ஒரு நாள் நிகழ்ந்தே
தீரும் மரணமும் காதலும்,
நீயும் வந்தாய் என் வாழ்வில்.
உன்னை சந்தித்த அந்த தருணங்கள்,
எனக்குள் நீ ஏற்படுத்திய சலனங்கள்,
உனக்குள் நான் தொலைந்த பொழுதுகள்,
என்னை பரிதவிக்கவிட்ட உன் பார்வைகள்,
என் உயிரைக் குடித்த உன் சிரிப்புகள்...
இவை எல்லாமே கனவாய் போய் விடக்கூடாதா....
அளவில்லா அன்பினால் அஸ்திவாரமிட்டு
சின்ன சின்ன ஆசைகளால் நான்
கட்டிய அழகிய வீட்டை,
முழுதாய் கட்டி முடிக்கும் முன்பே,
நீ இடித்து தரைமட்டமாக்கிய அந்த நாள்...
கனவாகவே போய்விடட்டும்...
"இல்லை" எனற ஒற்றை வார்த்தையால்
என்னை சுக்கு நூறாக்கி
கதறி அழ வைத்த அந்த நாள்
கனவாகவே போய்விடட்டும்...
இருமனமும் ஒருமனமாகி
அன்பில் கலப்பதுதான் காதல்.
நமக்குள் இருந்தது 'காதல்' இல்லை...என்று
"நீ" சொன்னால் நான் மறுக்க இயலாது..
ஒருவேளை நாம் நண்பர்களாகவே இருந்திருப்போம்...
உன் பார்வைகள் என்னை ஊடுறுவாமல் இருந்திருந்தால்...
உன் ரகசிய புன்னகைகள் என்மேல் படராமல் இருந்திருந்தால்..
உன் ஒவ்வொரு பார்வைக்கும்
என்னுள் புது புது அர்த்தங்கள் கொண்டேன்.
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை அறிய முயன்றேன்.. உன் மனம் அறியாமலே...
தவறு உன்னுடையதா..? என்னுடையதா..?
எங்கெ? எப்பொழுது?ஏன் நிகழ்ந்தது? எதுவாயினும்...
உன்னைபோல் எனக்கும்
"முதல் காதல்" தோல்வி...

1 comment:

  1. Alagana kadhal da..... Mudhal Kadhal Thotralum manathai vittu aliyathu....

    ReplyDelete