Wednesday, February 24, 2010

ரோஜா மலரே...

என்னாயிற்று உனக்கு...எங்கே உன் வாடிக்கை...


எப்பொழுதும் எனைக் கண்டதும் தலையாட்டி சிரிப்பாயே...

எங்கே அந்த குறுநகை...

எப்பொழுதும் தேன் சொட்டும் உன் இதழ்களில் ,

இன்று சோகம் சொட்டுவதேன்...

என்றும் ஆயிரம் கவிதைகள் பேசும் நீ...

இன்று மௌனம் பேசுவதேன்...

இரவு நேர இனிய சாரலின் துளிகள் மட்டும் உன் மேனியில்...

கலையான உன் தவத்தை கலைத்து விட்ட

காற்றின் மீது கோபமா...இல்லை...

உன் தேனின் சுவையை பருகிவிட்ட வண்டின் மீது கோபமா...

பதில் கூறடி என் ரோஜா மலரே....

No comments:

Post a Comment