வார்த்தைகளில் கத்தி ஏந்தி..,
இதயத்தை குத்திக் கிழிக்கும் உறவுகள்...,
உணர்வுகளை....சல்லடை போட்டு..,
சலித்து பார்க்கும் சுற்றம்...
கண்ணீர் சிந்தும் நிமிடங்களில்...
கை நீட்டி துடைக்க விரல்கள் இல்லை...
சுமைகள் பாரமாய் கணக்கும் போது,
ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லை...
கடிகார முள்ளோடு...போட்டி போடும்...
இயந்திர மனிதனுக்கு...
இதயத்தின் உணர்வுகளை..வாசிக்க நேரமில்லை...
இதழ் கடித்து..கண்கள் மூடி அழும் போது...,
என் இமை வழியாக வடிவது...
கண்ணீர் மட்டுமல்ல...
என் உயிரும்...வார்த்தைகளில் வடிக்க முடியாத வலிகளும் தான்...
என் பிறந்த நாளுக்கு நீ தரும் பரிசில் இல்லை..நம் நட்பு...
துன்பம் வரும் வேலையில்....
எனக்காக நீ ஒதுக்கும் சிலமணித் துளிகளில் தான் இருக்கிறது....
No comments:
Post a Comment