உன் நினைவுகளின் மழையில் நனைகிறேன்...
உன் இமை குடை கொண்டு வா....
உன் இதழ்களால் என் வெட்கம் துடை....
உன் மூச்சின் வெப்பத்தில் எனை குளிர்காய விடு....
------
நிலமகள் பருவமடைந்ததால்...
வானம் நடத்தும் நீராட்டுவிழா.
-----
தார்ச்சாலையில் ஜலதரங்கம்,
மத்தளமாய் இடிமுழக்கம்,
வண்ணஒளிக்கீற்றாய் மின்னல்கள்,
இசைமழையில்
ஆனந்த கூத்தாடும்
தெருவோர மரக்கிளைகள்..
-----
மேகத்திற்கும் காதல் தோல்வியா...?
இடியாய் கதறி,
அடைமழையாய்...
அழுது தீர்க்கிறதே!!!!
No comments:
Post a Comment