Sunday, February 28, 2010

மழை..!!!

உன் நினைவுகளின் மழையில் நனைகிறேன்...

உன் இமை குடை கொண்டு வா....

உன் இதழ்களால் என் வெட்கம் துடை....

உன் மூச்சின் வெப்பத்தில் எனை குளிர்காய விடு....

------
நிலமகள் பருவமடைந்ததால்...

வானம் நடத்தும் நீராட்டுவிழா.
-----
தார்ச்சாலையில் ஜலதரங்கம்,

மத்தளமாய் இடிமுழக்கம்,

வண்ணஒளிக்கீற்றாய் மின்னல்கள்,

இசைமழையில்

ஆனந்த கூத்தாடும்

தெருவோர மரக்கிளைகள்..
-----
மேகத்திற்கும் காதல் தோல்வியா...?


இடியாய் கதறி,

அடைமழையாய்...

அழுது தீர்க்கிறதே!!!!

No comments:

Post a Comment