Friday, February 26, 2010

தவிப்புடன் சில தருணங்கள்..

கிண்டலும்..,கேலியுமாய்..,
நம் பேச்சுகள் நகர்ந்தாலும்,
மனதுக்குள் ஒரே படபடப்பு...தவிப்பு...எப்பொழுதும்.
பேசி முடித்து, சிரித்து, ஓய்ந்த பின்,
மௌனமாய்...நீ ,
பார்க்கும் ஒற்றை பார்வையில்
தவித்து போய்விடுகிறேன் நான்.
உரிமையாய் சண்டை போடுகிறாய்..
செல்லமாய் சீண்டி பார்க்கிறாய்..
ஆழமான பார்வைகளால் என் உயிரைக் குடிக்கிறாய்..
நமக்குள் என்ன உறவென்று மட்டும் சொல்லாமல் வதைக்கிறாய்..

No comments:

Post a Comment