மேற்கில் சூரியன் மயங்கிய..மஞ்சள் நிற மாலை வேளையில்...
ஓர் அற்புத நாளில்....சந்தித்து கொண்டன நம் விழிகள்..,
சந்தித்த பொழுதுகள் என்னவோ...நிமிடங்கள் தான்....
பார்வையில்...பரிமாறி கொண்டவை ஆயிரம்...
ஒரு நொடி பார்வையில்,ஓராயிரம் கதைகள் பேச ,
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....
பார்வையின் தாக்குதல் இருவருள்ளும்...
அன்று இயல்பாய்...பதிந்த உன் உருவம்...ஏனோ..
இதயத்தை விட்டு விலகவே இல்லை...
வளர்பிறையாய் உன் நினைவுகள் என்னுள் மாற..
தேய்பிறையானேன் நான்...
ஏங்கிய பல நாட்கள் நேராத நம் சந்திப்பு...
எதிர்பாராமல் நிகழ்ந்தது மீண்டும்...
இரு ஜோடி விழிகள் பேசிய போதும்...
மொழிகள் பேசும் வாய்ப்பு ஏனோ அமையவில்லை...
தவிப்பாய் பிரிந்தோம்...தனித்தனியே...
மீண்டும் சந்திக்குமா.. நம் விழிகள்...
வழியை நோக்கி காத்திருக்கிறேன்...
No comments:
Post a Comment