* இனி நமக்கு
தேவைப்படப் போவதில்லை
குத்திக் கிழிக்கும் கூர்
வார்த்தைகள்...
* காத்திருத்தலிலும்,
தேடுதலிலும்
வீணாய் கரையும்
நேரங்கள் இனி மிச்சம்...
* சமாளிப்புகளும்,
பொய்களும் இனி நமக்கு
அவசியப்படாது...
* ஓயாமல் உழைத்துக்
கொண்டிருந்த நம்
அலைபேசிக்கு இனி
முழுநேர ஓய்வு...
* எதிர் பால்
நண்பர்களுடன்
உன், என் சந்தேகக் கண்களை
தாண்டி இனி
நிம்மதியாக நாம் சிரித்துப் பேசலாம்...
* இனி காதலிப்பதில்லை
என முடிவெடுத்த பின்
நஷ்டங்களை விட
லாபங்களே அதிகமாக இருக்கின்றன...!
— ரா.பூபாலன், கோவில்பாளையம்.
No comments:
Post a Comment