Tuesday, June 1, 2010

காதலை விட்டொழித்த பின்... (கவிதைச் சோலை!) From Varamalar





* இனி நமக்கு

தேவைப்படப் போவதில்லை

குத்திக் கிழிக்கும் கூர்

வார்த்தைகள்...



* காத்திருத்தலிலும்,

தேடுதலிலும்

வீணாய் கரையும்

நேரங்கள் இனி மிச்சம்...



* சமாளிப்புகளும்,

பொய்களும் இனி நமக்கு

அவசியப்படாது...



* ஓயாமல் உழைத்துக்

கொண்டிருந்த நம்

அலைபேசிக்கு இனி

முழுநேர ஓய்வு...



* எதிர் பால்

நண்பர்களுடன்

உன், என் சந்தேகக் கண்களை

தாண்டி இனி

நிம்மதியாக நாம் சிரித்துப் பேசலாம்...



* இனி காதலிப்பதில்லை

என முடிவெடுத்த பின்

நஷ்டங்களை விட

லாபங்களே அதிகமாக இருக்கின்றன...!

— ரா.பூபாலன், கோவில்பாளையம்.

No comments:

Post a Comment