Monday, March 1, 2010

என்ன வாழ்க்கை?

ஆயிரம் கரங்கள் கொண்டு அணைக்கும்
காலைக் கதிரவனைக் காண மனமில்லை,
போர்வைக்குள் புதைந்து கிடக்கிறான்..
காதலாய் வந்து முத்தமிடும்
தென்றலை ரசிக்க நேரமில்லை
கண்ணாடிக் கதவிற்க்குள் கைதியாகிறான்..

ஒற்றை மல்லிகை சரத்திற்கு ஏங்கும் மனைவிக்கு 
சற்றே புன்னகை உதிர்க்க தோன்றவில்லை..
இயந்திரத்துடன் இணைகிறான் ஒரு இயந்திரமாய்.

வாழ்க்கையை வாழத் தெரியவில்லை..
வசதியை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்...

No comments:

Post a Comment